ஜனா­தி­ப­தி­யே­ பொறுப்பு கூற­வேண்­டும்-காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள்

ஆசிரியர் - Admin
ஜனா­தி­ப­தி­யே­ பொறுப்பு கூற­வேண்­டும்-காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள்

எங்கள் கைகளால் கொடுத்த உற­வுகள் எவரும் தன்­னிடம் இல்லை. அது­பற்றி எதுவும் தெரி­யாது என்று மேடை­களில் பேசி­விட்டு போக முடி­யாது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மூன்று தட­வைகள் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்துப் பேசி­யி­ருக்­கின்றோம். 

இதன் ­போது தங்­க­ளது கோரிக்­கையை நிறை­வேற்­று­வ­தா­க வும் இதனை கையாள்­வதில் கால­தா­ம­த­மாகி விட்­ட­ தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார். அர­சிடம் ஒப்­ப­டைக்­கப் பட்ட எங்­க­ளது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்று கூற­வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­ப­தி­யிடம் உள்­ளது என்று காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலய முன்­றலில் இரவு பக­லாக நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது அந்த அமைப்பின் இணைப்­பாளர் கலா­றஞ்­சினி இங்கு கருத்துத் தெரி­விக்­கையில்,

யுத்தம் முடிந்த பின்னர் அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்­கப்­பட்ட எங்­க­ளது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற பதிலை சொல்ல வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­ப­தி­யிடம் உள்­ளது. எங்கள் கைகளால் கொடுத்த உற­வுகள் எவரும் தன்­னிடம் இல்லை.

அல்­லது அது பற்றி எதுவும் தெரி­யாது என்று மேடை­களில் பேசி­விட்டு போக முடி­யாது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மூன்று தட­வைகள் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து பேசி­யி­ருக்­கின்றோம். இதன்­போது தங்­க­ளது கோரிக்­கையை நிறை­வேற்­று­வ­தா­கவும் இதனை கையாள்­வதில் கால­தா­ம­த­மாகி விட்­ட­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

எங்கள் உற­வுகள் திரு­வி­ழாக்கள் எதிலும் காணா­மல்­போ­க­வில்லை. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் என்­பதை ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொண்­டவர். இர­க­சிய முகாம்­களை பார்­வை­யி­டவும் அவர்­க­ளது பெயர்ப் பட்­டி­யல்­களை வெளி­யி­டவும் கட்­ட­ளையை பிறப்­பிக்­கவும் தெரி­வித்­தவர். ஆனால் எத­னை­யுமே ஜனா­தி­பதி செய்­ய­வில்லை.

காணாமல் ஆக்­கப்­பட்ட எங்­க­ளது உற­வுகள் தொடர் பில் சர்­வ­தேச அனு­ச­ர­ணை­யுடன் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும். மாறு­பட்ட கருத்­துக்­களை கூறி வரும் ஜனா­தி­ப­தி­யிடம் எப்­படி எங்­க­ளுக்­கான நீதியை எதிர்­பார்க்க முடியும். ஒரு­வ­ருட காலத்­திலும் கூட இந்த பெயர் விவ­ரங்­களை கூட வெளி­யிட முடி­யாத ஜனா­தி­ப­தியால் தீர்வு கிடைக்கும் என்­பதில் எங்­க­ளுக்கு நம்­பிக்­கை­யில்லை.

சர்­வ­தேச சமூகம் அர­சாங்­கத்­திற்கு இரண்டு வரு­டங்கள் கால அவ­கா­சத்தை கொடுத்­துள்­ளது.   எங்களது உறவு களுக்கு என்ன நடந்தது என்ற பதிலை அரசாங்கம் தரவேண்டும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு