வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். அளவெட்டி, மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய் வடக்கு, நாகர் கோவில், மாமுனை, செம்பியன் பற்று, தாளையடி, உடுத்துறை, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, வத்திராயன், கட்டைக்காடு, கேவில், முள்ளியான், வடமராட்சி கிழக்கு கடற்தொழில் கூட்டுத் தாபனம், 55 ஆவது இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு