வடக்கில் 66 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்

ஆசிரியர் - Editor I
வடக்கில் 66 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்



வட மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு  66 ஆயுர்வேத வைத்தியர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கான நியமனக்கடிதங்களை மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் நேற்று வழங்கினார்.


மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்பட்ட நிலையில், மத்திய அமைச்சினால்  66 பேர் வழங்கப்பட்டுள்ளனர். 


இவர்கள் அனைவரும் எமது மாகாணத்தைச் சேர்ந்தவர்களே என அமைச்சர் தெரிவித்தார்.

புதிதாக நியமனம் பெற்றவர்கள் வடக்கின் 5 மாவட்டங்களிலும் வெற்றிடம் உள்ள வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு