யாழ்.மாவட்டத்தில் 46.5 மில்லியன் ரூபாய் இழப்பு..! ஈடு செய்ய அமைச்சர் சபை அங்கீகாரம்..
யாழ்.மாவட்டத்தில் அம்பான் புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 46.5 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அதனை வழங்க அமைச்சரவை இணங்கியிருக்கின்றது.
அம்பான் புயல் காரணமாக வாழை, பப்பாசி, தென்னை பயிர் செய்கை மோசமான பாதிப்புக்களை சந்தித்திருக்கின்றது.
இந்நிலையில் யாழ்.மாவட்ட செயலகத்தின் கணிப்பீட்டின்படி 46.5 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம்
நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் 46.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.