யாழ்.போதனா வைத்தியசாலையில் 48 பேருக்கு பரிசோதனை..! இருவருக்கு கொரோனா தொற்று, யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல, பணிப்பாளர் தகவல்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் 48 பேருக்கு கொரோனா பரிசோதனை இடம்பெற்ற நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் பரிசோதனை கூடத்தில் இடம்பெற்ற பரிசோதனைகளிலேயே தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இதன்படி தொற்றுக்குள்ளானவர்கள்
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டவர்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இதன்படி
* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - ஒருவர் .
* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 6 பேர்.
* தனிமைப்படுத்தல் மையம் வெள்ளாம்குளம் - 4 பேர்.
* தனிமைப்படுத்தல் மையம் வவுனியா - 18 பேர் .
* பாதுகாப்பு படையினர் ஆதாரவைத்தியசாலை முல்லைத்தீவு - 6 பேர்.
* ஆதாரவைத்தியசாலை தெல்லிப்பளை - ஒருவர்.
* தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு - 11 பேர்.(இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது
* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு புதுக்குடியிருப்பு - ஒருவர்.