யாழ்.துன்னாலையில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் ஒருவர் கைது..! வடமராட்சியில் பொலிஸார் மீது நடந்த நாட்டு வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்பு என சந்தேகம்..
யாழ்.வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அருகில் நாட்டு வெடிகுண்டில் சிக்கி பொலிஸார் காயமடைந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்தெ 27 வயதுடையவரே விசாரணைக்காக இன்றிரவு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில்
மற்றொருவரைத் தேடிச் சென்ற நிலையில் அவருடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளின் பின்னரே சந்தேக நபரின் கைது தொடர்பில் தகவல்களை வழங்க முடியும்.
என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.