யாழ். மடம் வீதியில் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி, சைகைகளால் தகாதமுறையில் நடந்து கொண்ட காவாலிக்கு நடந்த கதி..!
யாழ்.மடம் வீதியில் பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டயதுடன், சைககளால் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர்
யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலும்
அவரது மைத்துனர் வழங்கிய வாக்குமூலத்தில் அடிப்படையிலும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்
நேற்று புதன்கிழமை முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபரை நாளை வெள்ளிக்கிழமை வரை
விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.