யாழ்.வல்வெட்டித்துறை குண்டுவெடிப்பு தொடர்பில் யாழ்.மாவட்ட கட்டளை தளபதி கருத்து..! கொள்ளைகாரர்களின் செயல் என சாடல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை குண்டுவெடிப்பு தொடர்பில் யாழ்.மாவட்ட கட்டளை தளபதி கருத்து..! கொள்ளைகாரர்களின் செயல் என சாடல்..

யாழ்.வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் மணல் கொள்ளையர்களால் செய்யப்பட்டதென கூறியிருக்கும் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி ருவாண் வணிகசூரிய மக்களின் இயல்புவாழ்க்கைக்கு பங்கம் இல்லை எனவும் கூறினார். 

நேற்று வல்வெட்டித்துறை- வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இது முற்றாக மணல் கொள்ளையர்களால் செய்யப்பட்ட சம்பவம், இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது. 

எனினும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு