யாழ்.வல்வெட்டித்துறை குண்டு வெடிப்பு..! 3 கோணங்களில் தீவிர விசாரணை, சிறு குழு ஒன்றின் மீதே சந்தேகம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை குண்டு வெடிப்பு..! 3 கோணங்களில் தீவிர விசாரணை, சிறு குழு ஒன்றின் மீதே சந்தேகம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்..

யாழ்.வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் பொலிஸாரை இலக்குவைத்து, சிறு குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கிறோம் என பொலிஸ் பேச்சாளர் சாலிய சேனாரட்ண கூறியிருக்கின்றார். 

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில், இந்த சம்பவத்தின் பின்னால் சிறு குழு ஒன்றின் மீதே நாங்கள் சந்தேகிக்கிறோம். இதனடிப்படையில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் தீவிரமான விசாரணைகளில் இறங்கியிருக்கின்றனர். 

மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் எந்தவகையான? உள்நாட்டு தயாரிப்பா? என்பனபோன்ற விடயங்கள் தொடர்பாக தனியான விசாரணை இடம்பெற்றுவருவதுடன், இந்த சம்பவம் பொலிஸாரை இலக்குவைத்துதான் நடத்தப்பட்டதா?

அதற்காக திட்டமிடல்கள் இடம்பெற்றதா? என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு