பரிதாபகரமாக உயிரிழந்த 3 பிள்ளைகளின் தாய்..! 8 பேர் வைத்தியசாலையில், மறைந்திருந்தவர்களை மீட்ட பொலிஸார், பொதுமக்கள்..

ஆசிரியர் - Editor I
பரிதாபகரமாக உயிரிழந்த 3 பிள்ளைகளின் தாய்..! 8 பேர் வைத்தியசாலையில், மறைந்திருந்தவர்களை மீட்ட பொலிஸார், பொதுமக்கள்..

மலையகம்- ஹட்டன் டிக்கோயா பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எபோட்சிலி தோட்டத்தை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயானஅம்பிகாமலர் என்பவரவே உயிரிழந்தார்.டிக்கோயா தோட்ட தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில்

இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு கொத்தியதில் குளவி கலைந்து கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்கள் மீது கொட்டியுள்ளது. குளவி கொட்டுக்கு இலக்காகிய 

ஆறு பெண்களும் இரண்டு ஆண்களுமாக எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார்தெரிவித்தனர்.

மேலும் தேயிலை செடிகளினுள் குளவி கொட்டியவர்கள் சிக்குண்டுள்ளவர்களை மீட்க பிரதேசவாசிகளும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு