யாழ்.மாவட்டம் வன்செயல்களால் நிறைகிறது..! உடுவிலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு, கந்தரோடையில் வயோதிப தம்பதியை கத்தி முனையில் கட்டிவைத்து கொள்ளை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் வன்செயல்களால் நிறைகிறது..! உடுவிலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு, கந்தரோடையில் வயோதிப தம்பதியை கத்தி முனையில் கட்டிவைத்து கொள்ளை..

ஆட்கள் இல்லாத வீட்டின் மீது விசமிகளால் பெற்றோல் குண்டு மற்றும் மிளகாய்துாள் கரைசல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. 

யாழ்.உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. தாக்குதல் நடாத்தப்பட்டபோது வீட்டில் ஆட்கள் இல்லை. 

இந்நிலையில் அயலவர்களினால் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இந்த சமப்வம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. இதேபோல் யாழ்.கந்தரோடை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், 

வீட்டிலிருந்து வயோதிப தம்பதியை கட்டிவைத்துவிட்டு வீட்டிலிருந்த 7 பவுண் நகை மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றிருக்கின்றனர். 

குறித்த சம்பவத்தின்போது ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பலே வயோதிப தம்பதியை அச்சுறுத்தி கட்டிவைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு