என்னை மன்னித்து விடுங்கள்..! எனக்காக உயிரிழந்தவரின் பிள்ளைகளை நான் பத்திரமாக பார்த்துக் கொள்வேன்..

ஆசிரியர் - Editor I
என்னை மன்னித்து விடுங்கள்..! எனக்காக உயிரிழந்தவரின் பிள்ளைகளை நான் பத்திரமாக பார்த்துக் கொள்வேன்..

தன்னை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்து உயிரிழந்தவரின் குழந்தைகளை பொறுப்புடன் பார்த்துக் கொள்வேன். என்னை மன்னித்துவிடுங்கள். என தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்பட்ட இளம் பெண் கூறியுள்ளார். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணை பார்ப்பதற்காக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் ருவண் பெர்னாண்டோ தலவாக்கலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட பெண் தனது தீர்மானத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். எனது தனிப்பட்ட காரணத்தினால் நான் அவசர தீரமானம் ஒன்றை எடுத்து விட்டேன். இதனால் ஒரு உயிரை இழக்க நேரிட்டுள்ளது. 

அதற்கான என்னை மன்னித்து விடுங்கள். நான் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவுடன் என்னால் உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வேன். நீரில் அவர் எனது கையை பிடித்துக் கொண்டார்.

அதன் பின்னர் நாங்கள் இருவரும் நீருக்குள் சென்றுவிட்டோம். நான் மேலே வந்து விட்டேன். என்னை காப்பாற்ற வந்தவர் மேலே வரவில்லை. யாரோ டியுப் ஒன்றை பயன்படுத்தி என்னை காப்பாற்றியது எனக்கு நினைவில் உள்ளது. 

அது யார் என்று தற்போதே அறிந்துக் கொண்டேன். தலவாக்கலை காவல்துறை அதிகாரியே என்னை காப்பாற்றியுள்ளார். அனைவருக்கும் நன்றி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு