பிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்ட தாய்..! யாழ்.புத்துாரில் கொரூரம்..
பிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்ட தாயார் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
4 நாட்களுக்கு முன்னர் குறித்த தயாருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை புதிதாக கட்டப்பட்ட மலக்குழியில் போட்டுள்ளார்.
நான்கு நாள்கள் ஆகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன்,
தாயாரைக் கைது செய்தனர். குறித்த தாயின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.