யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வெளியே உச்சி வெய்யிலில் கால் கடுக்க நிற்கும் மக்கள்..! கவனிக்குமா நிர்வாகம்..?

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வெளியே உச்சி வெய்யிலில் கால் கடுக்க நிற்கும் மக்கள்..! கவனிக்குமா நிர்வாகம்..?

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் பலரும் மணிக் கணக்கில் கொழுத்தும் வெய்யிலில் காத்திருக்க வைக்கப்படுவதாக கடும் விசனம் தெரிவிக்ப்படுகின்றது.

மாதாந்த கிளினிக் சிகிச்சைக்காக செல்லும் முதியவர்கள் வீதியில் கால் கடுக்க வெய்யிலின் மத்தியில் காத்திருக்க வைக்கப்படுவதாக முதியவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காத்திருப்போர் தற்போது நிலவும் அதிக வெப்ப காலத்திலும் இரண்டு மணித்தியாலங்களிற்கும் மேலகாக வைத்தியசாலை வீதியில் காத்திருந்த பின்பே உள்ளே அனுமதிக்கப்படுவதனால் 

ஏற்கனவே உள்ள நோய்களிற்கு மேலதிகமாக புதிய நோய் ஏற்படும் நிலமை ஏற்படும் என அச்சம் ஏற்படுகின்றது.

எனவே தற்போது சூழலைக் கருத்தில்கொண்டு பணிப்பாளர் உடன் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றமை தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த விடயம் தொடர்பில் உடன் கவனத்தில் எடுக்கப்படும் எனப் பதிலளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு