கட்டுப்பாட்டை இழந்த வாகனம்..! பரிதாபகரமாக உயிரிழந்த சாரதி, உயிருக்கு போராடும் உதவியாளர்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்த வாகனம்..! பரிதாபகரமாக உயிரிழந்த சாரதி, உயிருக்கு போராடும் உதவியாளர்..

மரக்கறி கொண்டு சென்ற சிறியரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

இந்த சம்பவம் எல்ல- வெல்லவாய பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் லொறியின் சாரதியான 33 வயதுடைய அக்கறைப்பற்றைச் சேர்ந்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்திற்குள்ளான லொறியின் உதவியாளர் ஆபத்தான நிலையில், பதுளை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.இவ் விபத்து குறித்து எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு