முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி வல்வெட்டித்துறையில் பிரார்த்தனை..!

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி வல்வெட்டித்துறையில் பிரார்த்தனை..!

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று உயிரிழந்த மக்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி வல்வை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திலும், 

வல்வை பாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் அவர்களது ஏற்ப்பாட்டில் குறித்த ஆத்மசாந்தி பூசை 

இன்று மாலை 06 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது. இதில் கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன், இன்று முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை தடுத்த இராணுவம், பொலிஸார் 

அதற்குப் பல காரணங்களை சொன்னார்கள், ஆனால் 2009 ம் ஆண்டு இந்தப் போரை நடத்தியவர் இப்போதைய ஜனாதிபதி கோட்டா. அவற்றை மறைக்கவே இவ்வாறான தடைகளை ஏற்படுத்தினர், அவரது உள்ளத்தில் 

சில பிரச்சுனைகள் இருப்பதை உணர்கின்றேன், இதனை செய்யவிடாது தடுக்கிறார்கள் என்றால் எம் மீது எங்வளவான வெறுப்பில் உள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது. இதேநேரம் அவர்கள் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு