கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 11 பேருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல். கட்டளையை மீள பெற்றது நீதிமன்றம்..!

ஆசிரியர் - Editor I
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 11 பேருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல். கட்டளையை மீள பெற்றது நீதிமன்றம்..!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட 11 பேரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் கட்டளையை யாழ்.நீதிமன்றம் திரும்ப பெற்று கட்டளையிட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. 

அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் உள்ளாகக் கூடும். 

அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை மன்றினால் மீளப்பெறப்படுகிறது. என்று நீதிவான் ஏ.பீற்றர் போல், மீளாய்வு விண்ணப்பம் மீது கட்டளை வழங்கினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையிலான சட்டத்தரணிகளும் 

பொலிஸ் தரப்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர்  நீண்ட சமர்பணத்தினை முன்வைத்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு