யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனையில் ரவுடிகள் அட்டகாசத்தால் 15 வீடுகள் சேதம், பலர் படுகாயம், ரவுடிகளுக்கு எதிராக 5 முறைப்பாடுகள் பதிவு..
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் நேற்றய தினம் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இரு குடும்பத்தினருக்கிடையிலான சண்டை ஊர் சண்டையாக மாறிய நிலையில் வாள்கள், கம்பிகள், தடிகளுடன் நுழைந்த குப்பல் சுமார் 15 வீடுகளை அடித்து நொருக்கியுள்ளதுடன், பலர் மீது தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர்.
மேலும் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலும் நடாத்தப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.