யாழ்.வடமராட்சி கிழக்கு- குடத்தனை பகுதியில் இன்று மாலை பதற்றம்..! இரு வீட்டு சண்டை ஊர் சண்டையாக மாறி வெட்டுகுத்தில் முடிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு- குடத்தனை பகுதியில் இன்று மாலை பதற்றம்..! இரு வீட்டு சண்டை ஊர் சண்டையாக மாறி வெட்டுகுத்தில் முடிவு..

யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் இரு குடும்பத்தினருக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் ஊர் சண்டையாக மாறி வாள்வெட்டில் முடிந்திருக்கின்றது. இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதுடன், வாள்வெட்டுக்கும் இலக்கானர். 

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றய தினம் குடத்தனை பகுதியில் உள்ள இரு குடும்பத்தினருக்கிடையில் வாய்த்தர்க்கம் உருவாகியிருக்கின்றது. இந்த வாய்த்தர்க்கம் இன்று மாலை ஊர் சண்டையாக

மாறியது. இதன்போது வெளியிடங்களில் இருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டு பாரிய மோதலாக மாறியிருக்கின்றது. இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அப்பகுதி கிராமசேவகர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நிலமையினை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் எவரும் பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கவில்லை என கூறும் பொலிஸார், 

அதனால் விசாரணைகளை தொடர முடியவில்லை என கூறியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு