யாழ்.மாவட்டத்தில் மதுபானசாலைகள் திறந்து 2 நாட்களில் 27 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில்..! காரணம் என்ன தொியுமா?
யாழ்.மாவட்டத்தில் மதுபானசாலைகள் திறந்துவிடப்பட்டிருக்கும் நிலையில் இரு நாட்களில் மட்டும் 27 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மதுபானசாலைகள் திறந்துவிடப்பட்ட நிலையில் முண்டியடித்து மதுபானம் கொள்வனவு செய்வதை அவதானிக்ககூடியதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அமைதியாக இருந்த யாழ்.மாவட்டத்தில்,
தற்போது அடிதடியும் வீதி விபத்துக்களும் அதிகரித்திருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டும் 27 பேர் விபத்து மற்றும் அடிதடியில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அடிதடியினால் மட்டும் 15 பேர் இரு நாட்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 12 பேர் விபத்துக்களில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.