யாழ்.மாநகரசபை உள்வீட்டு குத்துவெட்டு நிறைவுக்கு வந்தது..! முதல்வர் ஆசனத்தில் அமரும் கனவு நனவானது பிரதி முதல்வருக்கு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை உள்வீட்டு குத்துவெட்டு நிறைவுக்கு வந்தது..! முதல்வர் ஆசனத்தில் அமரும் கனவு நனவானது பிரதி முதல்வருக்கு..

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தபோதும் மாநகரசபை முதல்வருக்கான பொறுப்புக்களை கையளிக்காமலிருந்த இமானுவேல் ஆனல்ட் இன்றைய தினம் தனது பொறுப்புக்களை பிரதி முதல்வர் ஈசனிடம் கையளித்திருக்கின்றார். 

இதனை பிரதி முதல்வர் து.ஈசன் உறுதிப்படுத்தியிருப்பதுடன், முதல்வருக்கான கடமைகளை உடனடியாகவே அவர் ஆரம்பித்திருக்கின்றார். இதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறும், பொறுப்புக்களை கையளிக்குமாறும், 

தேர்தல் ஆணைக்குழு முதல்வர் இ.ஆனல்ட்டுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில் அவர் விடுமுறை அறிவிக்கவில்லை, பொறுப்புக்களை கையளிக்கவில்லை. என பதில் முதல்வர் து.ஈசன் கூறியிருக்கின்றார். இந்நிலையில் முதல்வர் தொடர்ச்சியாக மாநகரசபைக்குள்ளேயே நடமாடியும் வந்துள்ளார். 

இதனையடுத்து உட்கட்சியினரே முதல்வர் பொறுப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக ஆனல்ட் விடுமுறை அறிவிக்கவில்லை. எனவும், பொறுப்புக்களை ஒப்படைக்கவில்லை எனவும் தொடர்ச்சியாக போட்டுக் கொடுக்கும் வேலையை செய்துவந்தனர். இந்நிலையில் பிரதி மேயரின் கட்சி தலைவரும், 

முதல்வரின் கட்சி தலைவரும் பேசிக் கொண்டதன் அடிப்படையில் தற்போது பொறுப்புக்கள் அனைத்தும் பிரதி மேயரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு