நிறை போதை மயக்கத்தில் சாரதி, சைக்கிள் கடைக்குள் புகுந்த கார்..! பொலிஸார் வந்ததும், பொதுமக்கள் கூடியிருப்பதும் கூட தொயாத நிலையில் சாரதி..

ஆசிரியர் - Editor I
நிறை போதை மயக்கத்தில் சாரதி, சைக்கிள் கடைக்குள் புகுந்த கார்..! பொலிஸார் வந்ததும், பொதுமக்கள் கூடியிருப்பதும் கூட தொயாத நிலையில் சாரதி..

யாழ்.நகரில் நிறை மதுபோதையில் கார் ஒன்றினை ஓட்டிவந்த நபர் ஒருவர் போதை மயக்கத்தில் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்தில் சிக்கியுள்ளார். விபத்து இடம்பெற்ற நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து, 

விபத்தில் சிக்கிய காரை தமது கட்டுப்பாட்டில் எடுத்ததுடன், போதை மயக்கத்தில் இருந்த சாரதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், போதை மயக்கம் தீர்ந்த பின்னர் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது. 

இதேவேளை விபத்து இடம்பெற்றமை, பொலிஸார் வந்தமை உள்ளிட்ட எந்தவொரு சம்பவமும் தொியாமல் சாரதி போதை மயக்கத்தில் இருந்ததாக மக்கள் கூறுகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு