யாழ்.பருத்துறை- மந்திகையில் படையினர் மீது தாக்குதல் நடாத்தியது யார்..? தீவிர விசாரணையில் களமிறங்கிய இராணுவம், புலனாய்வு பிரிவுகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை- மந்திகையில் படையினர் மீது தாக்குதல் நடாத்தியது யார்..? தீவிர விசாரணையில் களமிறங்கிய இராணுவம், புலனாய்வு பிரிவுகள்..

யாழ்.பருத்துறை- மந்திகை பகுதியில் படையினர் துப்பாக்கி சூடு நடாத்துவதற்கு முன்னர் படையினர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இன்று அதிகாலை படையினரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கால், கையில் காயமடைந்த இளைஞன் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சற்றுமுன்பதாக அந்த பகுதியால் வந்த இரு இளைஞர்களை படையினர் வழிமறித்துள்ளனர். இதன்போது அவர்களில் ஒருவர் மறித்த சிப்பாயின் கையில் கல்லால் பலமாக தாக்கியுள்ளார். 

இதனால் படுகாயமடைந்த சிப்பாய் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பலாலிக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். 

இந்நிலையில் படையினர் மீது தாக்குதல் நடாத்திய நபர்கள் யார்? என்பது தொடர்பில் புலனாய்வு பிரிவுகள், பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு