யாழ்.பருத்துறை- மந்திகை பகுதியில் பதற்றம்..! இளைஞன் மீது இராணுவம் துப்பாக்கி சூடு, இராணுவ சிப்பாய் மீது தாக்குதல்..
யாழ்.பருத்துறை- மந்திகை பகுதியில் இராணுவத்தினர் நடாத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. மந்திகை பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் வீதியால் சென்ற இருவரை மறித்துள்ளனர்.
இதன்போது வீதியால் வந்தவர்கள் மறித்த இராணுவத்தினரின் கையில் கல்லால் தாக்கிய நிலையில் இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அந்த பகுதியால் வந்த ஒரு இளைஞனை மீண்டும் இராணுவத்தினர் நிறுத்த முயற்சித்தபோதும் அவன் நிற்காமல் சென்றுள்ளான்.
இதனையடுத்து இராணுவம் அவனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததில் காயமடைந்த இளைஞன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் புலோலி பகுதியை சேர்ந்த பசுபதி அனுசன்(வயது 22) என கூறப்படுகின்றது.