பொலிஸார் குவிக்கப்பட்டு கடும் எதிர்ப்பு..! எதிர்ப்புக்களை மீறி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில்..
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2ம் நாள் நினைவேந்தல் இன்று மாலை யாழ்.பல்கலைகழகத்தில் எதிர்ப்புக்கு மத்தியில் நினைவுகூரப்பட்டிருக்கின்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று இரவு 7 மணிக்கு
உயிர்நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வு இடம்பெற இடத்திற்கு யாழ்ப்பாண காவல்துறையினர் வருகைதந்து
நினைவேந்தல் நிகழ்வினை நடாத்திய மாணவர்களின் பெயர் விபரங்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.