முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தபடுவர்..! பொலிஸ், இராணுவம் விடாப்பிடி..
பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் எதிர்ப்பை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்திய நிலையில் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தபோவதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
நினைவேந்தலை நடாத்த பொலிஸார் மற்றும் இராணுவம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. எனினும் எதிர்ப்பை மீறி நினைவேந்தல் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் கலந்துகொண்டவர்களின் பதிவுகளை பெற்ற பொலிஸார் அவர்களை தனிமைப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.