இலங்கை உயர்ஸ்தானிக இணையத்தளம் முடங்கியது

ஆசிரியர் - Admin
இலங்கை உயர்ஸ்தானிக இணையத்தளம் முடங்கியது

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் உலக இலங்கை பேரவை தெரிவித்துள்ளது.

கடந்த பெப்பரவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, தமது கழுத்தை காண்பித்து, அவர்களுக்கு சைகையொன்றின் மூலம் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பிரிகேடியர் ப்ரியங்க பெர்னாண்டோ, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின்பேரில் அவர் மீண்டும் பணியில் இணைக்கப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர் தமிழர்களால் உயர்ஸ்தானிகராலய இணையத்தளம் முடக்கப்பட்டதாக தாம் சந்தேகிப்பதாக பிரித்தானியாவில் உள்ள உலக இலங்கை பேரவையின் தலைவர் இந்திக குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த இணையத்தளத்தை மீள செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், இந்த விடயத்தை பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லது அவசியமானதாகும் என்று பிரித்தானியாவில் உள்ள உலக இலங்கை பேரவையின் தலைவர் இந்திக குணவர்தன தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு