யாழ்.திருநெல்வேலி- பரமேஸ்வரா சந்தியில் பூட்டிய கடைக்குள் பதுங்கியிருந்தவர் கைது..! தொலைபேசி மூலம் மாட்டினார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி- பரமேஸ்வரா சந்தியில் பூட்டிய கடைக்குள் பதுங்கியிருந்தவர் கைது..! தொலைபேசி மூலம் மாட்டினார்..

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்தில் தேடப்பட்டுவந்த நபர் ஒருவர் திருநெல்வேலி- பரமேஸ்வரா சந்தியில் உள்ள பூட்டப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த நபருடைய தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையில் அவர் பதுங்கியிருந்த இடத்தை கணித்த பொலிஸார் நேற்று குறித்த வர்த்தக நிலையத்தினை சுற்றிவளைத்துள்ளனர். 

இதனை அவதானித்த பக்கத்திலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் பதுங்கியிருந்த நபருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதை கூறியுள்ளார். 

இந்நிலையில் பதுங்கியிருந்த நபரையும், அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியவரையும் கைது செய்த பொலிஸார் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தவரை விடுவித்ததுடன், 

பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு