யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 1வது கொரோனா நோயாளி எங்கே..? பணிப்பாளர் சொன்ன தகவல்..
யாழ்.மாவட்டத்தில் 1வதாக கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில கொரோனா தொற்றுக்குள்ளான 17 போில் 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.
ஆனாலும் யாழ்.மாவட்டத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டிருந்த தாவடியை சேர்ந்த நபர் இன்னும் வீடு திரும்பாதை நிலையிலேயே பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளதுடன், மேலும் கூறுகையில்,
சுவிஸ் மத போதகருடன் நேரடி தொடர்பில் இருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட் கொரோனா நோயாளியான தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர்
தொடர்ந்து ஜ.டி.எச் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருடைய உடல் நலமும் தற்போது தேறி வருகின்றது. இந்நிலையில் மிக விரைவில் முழுமையாக குணமடைந்து
அவர் தனது வீட்டிற்கு வருவார் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.