யாழ்.மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை குறித்து வதந்தி பரப்பி மக்களை பீதிக்குள்ளாக்கியது யார்..? சைபர் குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை குறித்து வதந்தி பரப்பி மக்களை பீதிக்குள்ளாக்கியது யார்..? சைபர் குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு..

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடைபெற்றுவரும் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்பாக வதந்தி பரப்பி மக்களை பீதிக்குள் தள்ளியவர்கள் தொடர்பாக விசாரணை நடாத்துமாறு முறையிடப்பட்டுள்ளது. 

யாழ்.பல்கலைகழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி மற்றும் மருத்துவ பீடத்தின் பதில் பீடாதிபதி ஆகியோர் கூட்டாக இந்த முறைப்பாட்டினை வழங்கியிருக்கின்றார்கள். 

சைபர் குற்றவியல் விசாரணையுடன் இணைந்த இணைய பாதுகாப்புக்கான தேசிய மையத்தில் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த முறைப்பாட்டின் பிரதி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு