யாழ்.நல்லுாரில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..! இருவர் மீது வாள்வெட்டு, “கமி” குழு என்ற ரவுடி குழுவே காரணமாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுாரில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..! இருவர் மீது வாள்வெட்டு, “கமி” குழு என்ற ரவுடி குழுவே காரணமாம்..

யாழ்.நல்லுார் கிட்டு பூங்காவுக்கு அருகில் வாள்வெட்டு குழு ரவுடிகளின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் சேதமடைந்திருக்கின்றது. 

“கமி” குழு என அழைக்கப்படும் ரவுடி கும்பலால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர். இன்று மதியம் 2 மணியளவில் 10 மோட்டார் சைக்கிளில் புங்கன்குளம் வீதி வழியாக சென்றுள்ளனர்.

வீதியால் சென்ற போது இவர்களை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.இவ்வாறு சென்றவர்கள், முத்திரைச் சந்திக்கு சென்று அவ்விடத்தில் நின்ற 2 ஆட்டோவை சேதப்படுத்தியதுடன், இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு