யாழ்.சண்டிலிப்பாயில் பொலிஸார்- பொதுமக்கள் இடையில் மூர்க்கத்தனமான அடிதடி..! பொலிஸ் உத்தியோகத்தரும், பொதுமகனும் காயம், 4 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சண்டிலிப்பாயில் பொலிஸார்- பொதுமக்கள் இடையில் மூர்க்கத்தனமான அடிதடி..! பொலிஸ் உத்தியோகத்தரும், பொதுமகனும் காயம், 4 பேர் கைது..

யாழ்.சண்டிலிப்பாய்- இரட்டைப்பிலவு பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸார் பொதுமக்களுடன் தர்ககத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மேற்படி இரட்டைப்பிலவு பகுதியில் உள்ள இரு குடும்பத்தினருக்கிடையில் முரண்பாடு இருந்து வந்துள்ளது. இது குறித்து ஆராய்வதற்காக இன்று மதியம் குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்றனர். 

இதன்போது பொலிஸார் ஒரு வீட்டிலிருந்து மற்ற வீட்டுக்கு வேலிபாய்ந்து சென்றுள்ளனர். இதனால் குழப்பமடைந்த வீட்டுக்காரன் கூச்சலிட்டதை தொடர்ந்து இளைஞர்கள் அங்கு கூடியிருக்கின்றனர். 

இதனால் இரு தரப்பினருக்குமிடையில் உருவான முறுகல் மோதலாக மாறிய நிலையில் பொலிஸார் ஒருவரும், பொதுமகன் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து 

அந்த வீட்டிலுள்ள நால்வர் மானிப்பாய் போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட நோயாளர் காவு வண்டியும் 

பொலிசாரால் திருப்பிவிடப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு