நிறை மதுபோதையில் வீடு புகுந்து இராணுவம் அடாவடி..! வயோதிப பெண் வைத்தியசாலையில், தொப்பி, தொலைபேசியை கைவிட்டு தப்பி சென்றனர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த படையினர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தொலைபேசி மற்றும் தொப்பி ஆகியவற்றை விட்டு சென்றுள்ளதுடன், 

குறித்த வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்து தாக்குதல் நடாத்திவிட்டுத் தப்பி சென்றிருக்கின்றனர். இந்நிலையில் காயமடைந்த வயோதிப பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிறை மதுபோதையிலேயே படையினர் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வீட்டுக்கு சென்று பார்வையிட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு