மீண்டும் மகிழ்ச்சியான செய்தி..! மேலும் 4 பேர் யாழ்ப்பாணம் திரும்புகின்றனர், 14 பேர் இதுவரை பாதுகாப்பாக திருப்பினர்..
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் குணமடைந்துள்ள நிலையில் விசேட அம்புலன்ஸ்வண்டி மூலம் யாழ்.மாவட்டத்தில் அவர்களது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இரணவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 4 பேர் குணமடைந்துள்ளனர்.
அவர்கள் இன்று விசேட அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.மாவட்டத்திற்கு திரும்பவுள்ளனர். இதேவேளை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.