நீர்வேலி கொள்ளை..! பொலிஸாரின் வேட்டை தொடர்கிறது, கட்டுவனில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்ட நகைகள், பணம் மீட்பு..
யாழ்.நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் 5 சந்தேகநபர்களிடம் நடாத்தப்பட்ட தொடர் விசாரணைகளையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 4 பவுண் நகை ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள இளவாலை பகுதியை சேர்ந்தவருடைய உறவினர் ஒருவரின் கட்டுவன் பகுதியில் உள்ள வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த பொருட்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டிருக்கின்றது.