யாழ்.நகரில் மோசடி பேர்வழிகள் அடுத்தடுத்து கைவரிசை..! காப்புறுதி நிறுவன ஊழியர் 3500 ரூபாயை இழந்தார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் மோசடி பேர்வழிகள் அடுத்தடுத்து கைவரிசை..! காப்புறுதி நிறுவன ஊழியர் 3500 ரூபாயை இழந்தார்..

யாழ்.நகரில் உள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மோசடி பேர்வழி களிடம் ஏமாந்த சம்பவம் நேற்றும் யாழ்.நகரில் கஸ்த்துாரியார் வீதியில் இடம்பெற்றிருக்கின்றது.

வீதியில் பயணித்த காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரை அணுகிய மோசடி நபர் மதுபானம் வேண்டுமா எனக் கோரியுள்ளார். 

இதற்கு காப்புறுதி நிறுவனப் பணியாளர் ஆம் உனப் பதிலளிக்க 3 ஆயிரத்து 500 ரூபா பணத்தை கோரிப் பெற்ற பின்பு சிறிது தூரம் பயணித்து கடதாசி பையில் ஓர் போத்தலை எடுத்து வந்து 

வேகமாக பயணியுங்கள் எனக்கூறிய மோசடி நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இயக்கச்சியில் வசிக்கும் மதுபானத்தை பெற்றவர் அதனை எடுத்துச் சென்று 

அருந்துவதற்கு நண்பர் சகிதம் ஏற்பாடு செய்து டீ.சி.எல் மதுபானத்தை திறந்தவேளையில் வெட்கித் தலை குணிந்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு