யாழ்.சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர்..! சினிமா பாணியில் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர்..! சினிமா பாணியில் தப்பி ஓட்டம்..

போதைப்பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்.நாவாந்துறை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இன்று காலை தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பி ஓடியிருக்கின்றார். 

இதனையடுத்து நடாத்தப்பட்ட தேடுதலின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டிரு ப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்று காலை குறித்த நபர் தற் கொலைக்கு முயற்சித்த நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இதன்போது சிறைச்சாலை காவலர்களின் கண்காணிப்பை மீறி தப்பி ஓடி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கூலர் வாகனத்தை எடுத்தக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். பின்னர் வாகனத்தை யாழ்.கல்வியங்காடு பகுதியில் விட்டுச் சென்ற நிலையில் வாகனம் கணாமல்போனமை குறித்து 

வாகன உரிமையாளரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து வாகனம் கல்வியங்காடு பகுதியில் மீட்கப்பட்டிருப்பதுடன், தொடர்ந்து நடாத்தப்பட்ட தேடுதலில் தப்பி ஓடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு