வீட்டுத்திட்டம் வழங்க மறுத்த பிரதேச செயலகம், புதிய வீடுகட்டி வழங்கியது இராணுவம், யாழ்.உரும்பிராயில் இன்று கையளிப்பு..

ஆசிரியர் - Editor I
வீட்டுத்திட்டம் வழங்க மறுத்த பிரதேச செயலகம், புதிய வீடுகட்டி வழங்கியது இராணுவம், யாழ்.உரும்பிராயில் இன்று கையளிப்பு..

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தினால் வீட்டுத்திட்டம் மறுக்கப்பட்ட வயோதிபர் ஒருவருக்கு உரும்பிராய் மேற்கு கிராமத்தில் இராணுவத்தினரால் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. 

ஜே/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண் தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய் பிரதேச செயலகத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விடயம் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த துஷாரா தேனுவர என்ற பெண் வீட்டினை அமைத்து வழங்க முன் வந்திருந்தார். 

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை தனது பிறந்த தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) அந்தப் பெண் கையளித்தார். இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீட்டினை திறந்து வைத்து குறித்த பெண்ணிடம் ஒப்படைத்தார். 

குறித்த நிகழ்வில் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு