யாழ்.உடுவில் பகுதியில் அதிகாலையில் நடந்த பயங்கரம்..! ஊரடங்கு நேரம் வாள்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் அட்டகாசம், உயிருக்கு போராடும் வயோதிபர், நகை, பணம் கொள்ளை..

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவில் பகுதியில் அதிகாலையில் நடந்த பயங்கரம்..! ஊரடங்கு நேரம் வாள்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் அட்டகாசம், உயிருக்கு போராடும் வயோதிபர், நகை, பணம் கொள்ளை..

வீட்டுக்குள் நுழைந்து வயோதிப தம்பதியை கட்டிவைத்து சித்திரவதை செய்ததுடன், வீட்டிலிருந் த 15 பவுண் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. 

இந்த சம்பவம் உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தின்போது வாள்கள், கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்து வயதான தம்பதிகளை கட்டிவைத்து சித்திரவதை செய்துள்ளனர். 

இதனால் குடும்பதலைவர் தலையில் பலத்த காயமடைந்துள்ள நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயோதிபத் தம்பதியின் 3 பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர். 

வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், எங்களைக் கட்டிவைத்தது. கணவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் கொத்தியது. 

எனது கன்னத்தில் அறைந்து. அதனால் நாம் நிலைகுலைந்தோம்.சுமார் 3 மணிநேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு கும்பல் தப்பித்தது என்று குடும்பப் பெண் விசாரணையில் தெரிவித்தார். 

கொள்ளையர்கள் மூவரும் 20 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களாதான் இருக்கும். அவர்களில் ஒருவன் கைகளில் கையுறை போட்டிருந்தான். வீட்டில் பிள்ளைகளின் நகைகளுடன் 15 பவுண் நகைகள் இருந்தன. 5 லட்சம் ரூபாய் பணமும் இருந்தது. அவை கொள்ளையிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மோப்ப நாய் அழைத்துவரப்பட்டு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு