10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய நபர்..! யாழ்.நகரில் நடமாடும் மோசடி பேர்வழிகள், மக்களே அவதானம்..

ஆசிரியர் - Editor I
10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய நபர்..! யாழ்.நகரில் நடமாடும் மோசடி பேர்வழிகள், மக்களே அவதானம்..

யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் 10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருப்பதாக வர்த்தகர்கள் கூறியிருக்கின்றனர். 

நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு வந்த ஒருவர் தன்னிடம்  போத்தல் சாரயம் உள்ளதாகவும் போத்தல் ஒன்றுக்கு 3500 ரூபாய் வீதம் 10500 ரூபாய் பணம் தந்தால் அந்த 3 சாராய போத்தல்களையும் தருவதாக கூறியிருக்கின்றார். 

இதனையடுத்து ஜிம்மா பள்ளிவாசல் வீதிக்கு வர்த்தக நிலைய பணியாளரரை அழைத்த மர்ம நபர் 10500 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு  3 போத்தல்களை பையில் வைத்து கொடுத்து விட்டு பொலிஸார் வருகின்றனர் என கூறியபடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். 

இந்நிலையில் சாராயம் வாங்கியதாக நினைத்துக் கொண்டு வந்த நபர் பையை திறந்துபார்த்த போது பையில் 3 போத்தல்கள் நிறைய தேயிலை சாயம் இருந்ததை கண்டு ஏமாந்துள்ளார். இவ்வாறான சம்வம் ஒன்று நேற்று முன்தினமும் இடம்பெற்றுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு