யாழ்ப்பாணத்தில் நடந்த அசிங்கம்..! 6 மாதங்களாக 14 வயது சிறுமி மீது பலாத்காரம், சிறுமியின் 19வயது சகோதரனும், 22 வயது மாமனும் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் நடந்த அசிங்கம்..! 6 மாதங்களாக 14 வயது சிறுமி மீது பலாத்காரம், சிறுமியின் 19வயது சகோதரனும், 22 வயது மாமனும் கைது..

உரும்பிராய் பகுதியில் 14 வயதான சிறுமியை பலாத்காரம் புரிந்த குற்றச்சாட்டில் 19 வயதான சகோதரனும், 22 வயதான மாமனனும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

வைத்தியசாலைக்கு சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சந்தேகம் ஏற்பட்டு பொலிஸார் விசாரணை முன்னெடுத்தனர். 

அதனடிப்படையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டது. சிறுமியால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் 

சிறுமியின் சகோதரரான 19 வயது இளைஞனும் சிறுமியின் மாமன் உறவு முறையுடைய 22 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.

சிறுமி, சட்ட மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளார். 

சிறுமியை சுமார் 6 மாதங்களாக சந்தேக நபர்கள் சித்திரவதைக்குட்படுத்தியுள்ளனர். சிறுமி கர்ப்பவதி என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுதொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கை கிடைத்ததும் சந்தேக நபர்கள் இருவரும் 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு