யாழ்.நாவாந்துறையில் வீடொன்று தீக்கிரை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறையில் வீடொன்று தீக்கிரை..

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் புதன்கிழமை (2) வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.


வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன், மாநகர சபை தீயணைப்பு படையினருக்கும் அறிவித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு