மயானத்தில் நினைவு கற்கள் உடைப்பு விவகாரம்..! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
யாழ்.நவாலியில் உள்ள அமொிக்கன் சிலோன் மிஷன் மயானத்தில் நினைவு துாபிகள் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்க ளிடம் நடாத்தப்பட்ட விசாரணையில்,
குறித்த கும்பல் மயானத்தில் இருந்து கள்ளு குடித்துவிட்டு இந்த கல்வெட்டுக்களை சேதமாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 3 பேர் கிறிஸ்தவர்கள் 2 பேர் இந்துக்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.