உறவினர்களுக்கிடையிலான சண்டையில் அடித்து கொலை செய்யப்பட்ட குடும்பஸ்த்தர்..! சகோதரர்கள் 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
உறவினர்களுக்கிடையிலான சண்டையில் அடித்து கொலை செய்யப்பட்ட குடும்பஸ்த்தர்..! சகோதரர்கள் 3 பேர் கைது..

உறவினர்களுக்கிடையிலான சண்டையில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம் பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைதான 3 பேரும் சகோதரர்கள் என கூறப்படுகின்றது. 

கைது செய்யப்பட்ட 3 பேரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகி ன்றனர். என பொலிஸார் கூறியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. 

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜகோன் சிவகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். அவரது மைத்துனர்கள் மூவரே வீடு புகுந்து உயிரிழந்தவரை வளால் வெட்டியதாக விசாரணைகளில் தெரிவிக்ககப்பட்டது.

இருதரப்புக்கும் இடையே மோதல் இடம்பெற்ற நிலையில் சகோதரர்கள் மூவரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையிலும்  சேர்கப்பட்டனர்.

அத்தோடு உயிரிழந்தவரின் துணைவியும் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 

சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்துமாறு சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு