யாழ்.நகரை கலக்கிய மோட்டார் திருடர்கள் சிக்கினர்..! 2 லட்சம் பெறுமதியான மோட்டார்கள், சிலின்டர்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரை கலக்கிய மோட்டார் திருடர்கள் சிக்கினர்..! 2 லட்சம் பெறுமதியான மோட்டார்கள், சிலின்டர்கள் மீட்பு..

யாழ்.பொலிஸ் நிலைய எல்லைக்குள் நீர் இறைக்கும் மோட்டார்கள், சமையல் எரிவா யு சிலின்டர்களை திருடிய குற்றச்சாட்டில் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் 2 லட்சம் பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டார்கள், மற்றும் சமயல் எரிவாயு சிலின்டர்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.அரசடி வீதி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பொருள்களை கல்வியங்காடு மற்றும் கட்டப்பிராய் பகுதிகளில்கொண்டு சென்று சந்தேக நபர்கள் விற்பனை செய்தமை கண்டறிப்பட்டது. 

அதனடிப்படையில் அங்கிருந்து திருட்டுப் பொருள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மூவரையும், யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த கைது நடவடிக்கையை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னெடுத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு