தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த இரு முதியவர்கள் திடீர் சுகயீனத்தால் உயிரிழப்பு..! முல்லைத்தீவில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த இரு முதியவர்கள் திடீர் சுகயீனத்தால் உயிரிழப்பு..! முல்லைத்தீவில் பதற்றம்..

முல்லைத்தீவு- கேப்பாபிலவு விமானப்படை தளத்தில் கொரோனா சந்தேகத்தில் தனி மைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரு முதியவர்கள் இன்றைய தினம் திடீர் சுகயீன த்தினால் உயிரிழந்திருக்கின்றனர். 

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முதியவர் ஒரு வர் இன்று காலை உயிரிழந்த நிலையில் இன்று மாலை மேலும் ஒருவர் உயிரிழந்துள் ளார். இருவரும் திடீர் சுகயீனமடைந்த நிலையில், 

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. இவர்கள் உயிரிழந்தமைக்காண காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் உடலம் 

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த நபரின் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இன்று மட்டும் இரண்டு முதியவர்கள் உயிரிழந்த நிலையில் 

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச சூழல் உருவாகி உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு