யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு சட்டத்தை சாதகமாக்கி தொடர் கொள்ளை..! இன்று அதிகாலையும் வாள்களுடன் நுழைந்து 3 வீடுகளில் துணிகர கொள்ளை..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு சட்டத்தை சாதகமாக்கி தொடர் கொள்ளை..! இன்று அதிகாலையும் வாள்களுடன் நுழைந்து 3 வீடுகளில் துணிகர கொள்ளை..

யாழ்.நீர்வேலி பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அடுத் தடுத்து 3 வீடுகள் உடைக்கப்பட்டு பெருமளவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

ஒரு வீட்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றொரு வீட்டில் 2 பவுண் எடையுடைய சங்கிலிகள் இரண்டும் கொள்ளையிடப்பட்டதுடன் மூன்றாவது வீட்டில் துவிச்சக்கர வண்டி திருடப்பட்டுள்ளது.

முகமூடி அனிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. 

இரண்டு வீடுகளுக்குள் புகுந்த கும்பல் அங்குள்ளவர்களை தாக்கியும் அச்சுறுத்தியும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு