மாவீரர் தினம் அனுட்டித்தமை தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் TID யினர் வீடு புகுந்து விசாரணை..!

ஆசிரியர் - Editor I
மாவீரர் தினம் அனுட்டித்தமை தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் TID யினர் வீடு புகுந்து விசாரணை..!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். 

கொக்குவிலில்- மணியர்பதி பகுதியில் உள்ள சட்டத்தரணி மணிவண்ணனின் வீட்டுக்கு இன்று பிற்பகல் 2 மணியளவில் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சில ஆவணங்களைக் காண்பித்து சுமார் 30 நிமிடங்கள் குறிப்பெடுத்துச் சென்றுள்ளனர். 

மாவீரர் தினம் அனுசரித்தமை தொடர்பில் ஒளிப்படம் ஒன்றைக் காண்பித்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், அந்த ஒளிப்படத்தை முன்வைத்து நபர் ஒருவரால் 

முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை உறுதி செய்யும் வகையில் விசாரிப்பதற்கே வந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

எனினும் அது பழைய ஒளிப்படமாக உள்ளதால் தனக்கு நினைவில் இல்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு