13 வயதான சிறுவன் பரிதாபகரமாக பலி..! யாழ்.கல்வியங்காட்டில் சோகம்..

ஆசிரியர் - Editor I
13 வயதான சிறுவன் பரிதாபகரமாக பலி..! யாழ்.கல்வியங்காட்டில் சோகம்..

யாழ்.கல்வியங்காடு- செம்மணி பகுதியில் மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த 13 வயதான சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். 

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார்.

சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள து. சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு