யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 6வது நபர் கொரோனாவிலிருந்து மீண்டார்..! இன்று யாழ்ப்பாணம் திரும்புகிறார்..
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இரணவில விசேட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர் குணமடைந்த நிலையில் இன்று அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் திரும்பவுள்ளார்.
மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இதேவேளை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் 5 பேர் குணமடைந்து ஏற்கனவே யாழ்ப்பாணம் திரும்பியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.